உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 8) சட்டசபைக்கு பெண் எம்.எல்.ஏ ஒருவர் குதிரையில் வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. உலக மகளிர் நாளையொட்டி ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பா பிரசாத் குதிரையில் சட்டமன்றத்துக்கு வந்தார்.
Jharkhand: Congress MLA Amba Prasad arrives at the Assembly riding a horse in Ranchi.
“This horse has been gifted to me by Colonel (retired) Ravi Rathore on the occasion of #InternationalWomensDay,” she says. pic.twitter.com/fwBnoAzAuG
— ANI (@ANI) March 8, 2021
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பார்காகோன் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அம்பா பிரசாத். சட்டப்பேரவையிலேயே இளம் வயது உறுப்பினரான அவர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவைக்குக் குதிரை மீது அமர்ந்து வந்தார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ரவி ரத்தோர் உலக மகளிர் நாளையொட்டி தனக்கு இந்தக் குதிரையைப் பரிசளித்ததாக அவர் தெரிவித்தார்.
**-ராஜ்**
�,”