கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை இன்று (நவம்பர் 28) பிரதமர் மோடி மூன்று இடங்களில் நேரில் பார்வையிட்டார்.
முதலில் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கே உருவாகும் கொரோனா தடுப்பூசியின் நிலை பற்றி ஆய்வு செய்தார். அதன் பிறகு மோடியின் ட்விட்டரில், ஜைடஸ் காடிலா உருவாக்கிய உள்நாட்டு டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி பற்றி மேலும் அறிய அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவிற்கு சென்று பார்வையிட்டேன். இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள குழுவினரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் பணி, இந்த பயணத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு அவர்களுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக் பரிசோதனைக் கூடத்துக்கு மோடி இன்று சென்றார்.
ஹைதராபாத் புறநகரில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள ஆலையில், மோடிக்கு பாரத் பயோடெக் நிறுவனர் மற்றும் தலைவர் கிருஷ்ணா எலா மற்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர். பிரதமர் பாரத் பயோடெக் வசதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டார், அங்கு தடுப்பூசியின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதுபற்றி மோடி தனது ட்விட்டரில், “ ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் பரிசோதனைக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து எனக்கு விளக்கமளித்தனர். இதுவரை நடந்த சோதனைகளில் விஞ்ஞானிகளின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்திற்கு அவர்களின் குழு ஐ.சி.எம்.ஆருடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமரின் ஆய்வு குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமரின் வருகை எங்கள் அணிக்கு ஒரு சிறந்த உத்வேகமாக அமைகிறது, மேலும் விஞ்ஞான கண்டுபிடிப்பு, பொது சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பது, கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போராட்டத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதமரின் வருகை மேலும் வலுப்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து புனேவுக்கும் சென்றார் மோடி. அங்கு அவர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் உற்பத்தி நிலையத்தை பார்வையிடுகிறார்.
**-வேந்தன்**�,”