ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட அன்றைய நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு நேற்று முன் தினம் நடத்திய ஒளிரும் தமிழகம் மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்படி பழனிசாமி, “கொரோனா பாதிப்பால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர் என்று கவலைப்பட வேண்டாம். உள்ளூர் தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்தி பழையபடி தொழிலை மேற்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதனை குறிப்பிட்டு இன்றைய உரையை ஆரம்பித்த ஜெயரஞ்சன், தமிழகத் தொழிலாளர்கள் வேலைக்கு வராததற்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிதான் காரணம் என்று சொல்பவர்களை பகடியாக சாடினார்.
முழுக் காணொலியையும் கீழே காணலாம்.
�,”