தியாகி என்று கூறுவதற்கு, செந்தில் பாலாஜி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை கைது செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கு திமுக கூட்டணி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என்று பதிவிட்டிருந்தார்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜவைச் சேர்ந்தவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்,
“1.செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்…. எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?….
2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்….தியாகி என்று கூறுவதற்கு?….
3. இந்தியா கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல …..
4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக ….
5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்….
6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால்….மத்திய அரசினால் அல்ல ….
7. எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு…
ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை…..” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கண் இமையில் உயிருடன் இருந்த 16 செ.மீ புழு… எப்படி உருவானது?
வேலை வாங்கித் தருவதாக பணமோசடி : புகார் முதல் தீர்ப்பு வரை -செந்தில் பாலாஜி வழக்கின் டைம்லைன்!
Comments are closed.