ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3.25 லட்சம் கடனை வைத்தது தான் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
3.25 லட்சம் கடன்!
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அளித்துள்ள பேட்டியில், “இன்றைக்கு தமிழகத்தினுடைய தனிநபர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று திமுகவின் இரண்டாண்டு சாதனையாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.
1 லட்சத்து 66ஆயிரம் உயர்ந்திருக்கிறது என்பதை எந்த புள்ளிவிபர அடிப்படையில் அவர் இந்த செய்தியை வெளியிட்டார் என்பதை விளக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் தனி நபர் வருமானம் 15,000 ரூபாய் மாதத்திற்கு வருவதாக சொல்கிறார், ஆனால் 30 நாட்களுக்கு முழுமையாக யாருக்கு வேலை கிடைப்பதில்லை.
ரூ. 7.26 லட்சம் கோடி கடன் சுமையை ஏற்றி ,இந்தியாவிலேயே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகம் என்கிற ஒரு நிலையை இன்றைக்கு திமுக அரசின் நிர்வாகத்தாலே உயர்ந்திருக்கிறது
இதன் மூலம் இரண்டு கோடியே 18 லட்சம் குடும்பங்களின் ஒவ்வொரு தலையிலும் 3.25 லட்சம் கடனை வைத்திருப்பதும், இந்தியாவிலே அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதும் தான் திமுகவின் இரண்டாண்டு சாதனையாகும்.
கொடுத்த 520 வாக்குறுதிகளை காப்பாற்றாதது திமுகவின் இரண்டாண்டு சாதனை, மின்சார கட்டணத்தை உயர்த்தியது இரண்டாண்டு சாதனை, பால்விலையை உயர்த்தியது இரண்டாவது சாதனை, ரூ.30,000 கோடி கொள்ளை இராண்டாண்டு சாதனை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என்று கொலை நடக்காத நாளே இல்லை இது குறித்து பத்திரிகையிலே ஒவ்வொரு நாளும் செய்தி வந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
உதயநிதியின் பேச்சு!
இதையெல்லாம் திசை திருப்ப எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், படித்துக்கொள்ளாமல் பேசி இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் பல நூறு ஆண்டு காலமாக கடைபிடித்து வந்த சனாதன தர்மத்தை அழிப்பேன், ஒழிப்பேன் என்ற உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அவருடைய நிலையை இன்றைக்கு உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது. இதற்காக அவரது தந்தை நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட அனைத்துபிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று சொன்னால், எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வந்தால் தான்தீர்வு காண்பார் என்று நம்பிக்கையோடு மக்கள் இன்றைக்கு பெட்டிக்கடைகளிலும், காய்கறி கடைகளிலும், தெருவோரக்கடைகளிலும் பேசிக்கொள்கிறார்களே அது தான் இன்றைய எதார்த்தமான உண்மை.
இன்றைக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என பல நகராட்சிகளிலே, பேரூராட்சிகளிலே இருக்கிறது இது குறித்து நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
தமிழர்கள் தங்களின் அயராத உழைப்பால், தன்னுடைய ஆற்றலால், உலகெங்கும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரயான் 1,2,3., ஆதித்யா விண்கலத்தை விண்வெளியில் அனுப்பி சாதனை மற்றும் கூகுள் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை என்று உலக அளவில் தமிழர்கள் பெருமை அடைந்து வருகிறார்கள் ஆனால் உதயநிதி வாய்க்கு வந்ததை உளரி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்.
பிறர் மனதை துன்புறுகிற வகையில், வேதனை படுத்தி பேசி நீங்கள் எந்த கோட்டையை பிடிக்கப் போகிறீர்கள் உதயநிதி ஸ்டாலின்? உங்களை நீங்கள் அரசியல் தலைவராக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. அதை நீங்கள் சிறப்பாக கையாளலாம்
ஆனால் இந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு அவர்களுக்குகென்று ஒரு அடிப்படை நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் பிறப்பால் ,வளர்ப்பால் ஞானத்தால் கடை பிடித்து வருவதை டெங்கு, மலேரியா போன்று ஒழிப்பேன் என்று மதிப்பிடுவது , உங்கள் மதிப்பு என்ன தற்போது தெரிய செய்துவிட்டது.
உண்மையை மக்களிடத்திலிருந்து நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. உண்மை ஒருநாள் வெளியே வரும். இந்த தமிழ்நாட்டு மக்கள் படும் வேதனைக்கும், வடிக்கிற கண்ணீருக்கும் தீர்வு காண எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வந்து தீர்வு காண்பார் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
ரூ.16 கோடி மோசடி… பிரபல தயாரிப்பாளர் கைது: பின்னணி என்ன?
Comments are closed.