குட்கா வழக்கு : சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அனுமதி!

அரசியல்

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரிடம் சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120 பி, 7,11, 12, 13(2) r/w 13(1)(d) மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடம் விசாரிக்க தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் எழுதியது. அதற்கு இன்று (ஜூலை 23) தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த கடிதத்தில், “முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், முன்னாள் வணிகவரித்துறை அதிகாரிகள் குறிஞ்சி செல்வன், கணேசன், முன்னாள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லக்‌ஷ்மி நாராயணன், சென்னை புழல் பகுதி முன்னாள் துணை ஆணையர் மன்னர் மன்னன், முன்னாள் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் பழனி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *