ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 21) மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்தலாம் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ் பேரணியை மீண்டும் நடத்த விண்ணப்பிக்கலாம். காவல்துறை அதனை சட்டப்படி பரிசீலனை செய்து முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்துறையிடம் விண்ணப்பிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
சர்வதேச தாய்மொழி தினம்: முதல்வர் வாழ்த்து!
ஸ்டாலின் 70: துரைமுருகன் புதிய அறிவிப்பு!