உக்ரைன் தலைநகர் கீவ்வில் தொடர்ந்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்துவதால் ஐந்து முக்கிய நிர்வாகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போரை தொடங்கியது.
மிகப்பெரிய படை பலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.
அதே வேளையில் ரஷ்யாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
சமீபத்தில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்சோவின் டெலிகிராம் பதிவில், இந்தத் தாக்குதலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக, உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஷ்ராப்னல் மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து நிர்வாகக் கட்டடங்களை ட்ரோன் சேதப்படுத்தியது.
கீவ் மற்றும் பிராந்தியத்தின் மீது உக்ரைன் படைகள், ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது” என்று ஆளுநர் ஓலெக்ஸி குலேபா தெரிவித்தார். ஆனால், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
-ராஜ்
நிலத்தடி நீரை அதிகரிக்க பேவர் பிளாக் சாலை: சென்னை மாநகராட்சி திட்டம்!