“மகளிருக்கு ஆயிரம்…வெத நான் போட்டது”: கமல்

அரசியல்

தமிழக சட்டசபையில் 2023- 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (மார்ச் 20 ) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று (மார்ச் 20 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம்.

புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மார்ச் 22ல் ஓபிஎஸ் மனு ; மார்ச் 23ல் சசிகலா வழக்கு விசாரணை!

இயக்குநருக்கு பரிசளித்த சசிகுமார்

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *