அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்ககோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 7) நிராகரித்து உத்தரவிட்டது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சமூகப்பெயர் குறித்து ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறி குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக அவர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சூரத் செஷன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லை என்று கூறி ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.
”மஞ்சள் ஜெர்சியில் விரைவில் சந்திப்போம்”- ஜடேஜா வாழ்த்து!