தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு!

அரசியல் இந்தியா

தனது 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 2) ராகுல்காந்தி மேல் முறையீடு செய்ய உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் ’மோடி’ என்ற பெயரை பயன்படுத்தி பேசினார்.

இதனையடுத்து ராகுல் காந்திக்கு மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 23ம் தேதியன்று ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கி ஜாமீன் கொடுத்தது சூரத் நீதிமன்றம்.

அதன் தொடர்ச்சியாக 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி அவரது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். அதற்காக நாளை சூரத் செல்ல உள்ளார்.

மேல்முறையீடு மனுவில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்தாகும். இல்லையென்றால் அவர் அடுத்த 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஐபிஎல் புதிய விதிகள்: வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை குழப்பம்!

எரிகிறது எல்.ஐ.சி!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *