அண்ணாமலையின் சாம்பார் கணக்கு: வாட்சை விடாத செந்தில் பாலாஜி

அரசியல்

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை பாஜக தலைவர் அண்ணாமலை மக்களிடம் சொல்ல வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 5 லட்சம் மதிப்புடைய ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்

அவருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ரஃபேல் வாட்ச் வாங்கிய விலையின் ரசீது உள்பட தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு ட்வீட் செய்துள்ள செந்தில் பாலாஜி, “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம்.

இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.

செல்வம்

“தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து விடுகிறார்கள்” – ஸ்டாலின்

ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *