செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு!

Published On:

| By christopher

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இன்று (ஜூலை 22) நேரில் ஆஜராகாததால் அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 49வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

மேலும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை வரும் 22ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜர்படுத்தவும் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதற்கிடையே செந்தில்பாலாஜிக்கு நேற்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு  தாக்கல் செய்யபட்ட மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு  நேரில் ஆஜராகவில்லை என நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, வழக்கு விசாரணையை வரும் ஜூலை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’பணம் இருந்தால் இந்திய தேர்வு முறையை வாங்கலாம்’ : ராகுல் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவா? உச்ச நீதிமன்றம் கேள்வி!

நிபா நோய்த்தொற்றால் சிறுவன் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share