பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை ஓ.பன்னீர் செல்வம் வழங்குகிறார்.
அதிமுக சார்பில் 2014 முதல் ஆண்டுதோறும் ராமநாதபுரம், பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் செலுத்தி மரியாதை செலுத்தப்படும்.
4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்கக்கவசம் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் வங்கியில் இருந்து எடுத்து அணிவித்து வந்தார்.
தற்போது அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில், தங்கக் கவசத்தை யார் பெறுவது என்று மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ராமநாதபுரம் கோட்டாட்சியர் தங்கக் கவசத்தைப் பெற்று தேவர் சிலைக்கு அணிவிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் தேவர் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை வழங்கவுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் 60ஆவது குருபூஜை நாளான இன்று,
அம்மா அவர்களின் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளி கவசம் அணிவிக்கும் பொருட்டு,
10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கவசத்தைப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட காப்பாளர் காந்தி மீனாள் அவர்களிடம் வழங்கி மரியாதை செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பன்னீர் செல்வம், தொடர்ந்து பசும்பொன் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரியா
இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!