ஆன்லைன் சட்ட மசோதா ஒப்புதல்: ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக கண்டன பொதுக்கூட்டம்!

அரசியல்

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சைதாப்பேட்டை தேரடி திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

“மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வருகிற 12-04-2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் ஏற்கனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இன்று (ஏப்ரல் 10) தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வந்து, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்நிலையில், இன்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர் ‘ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளார்.

இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும்,

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் விளக்கமும் அளிக்காத காரணத்தினால்,

ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம்,

அதே 12-4-2023 அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் “மாபெரும்கண்டன பொதுக்கூட்டமாக” நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

தேசிய கட்சி அங்கீகாரம்: கெஜ்ரிவாலுக்கு எஸ் ! மம்தாவுக்கு நோ !

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *