8வது முறையாக முதலமைச்சரானார் நிதிஷ்குமார்

அரசியல்

பிகார்  மாநிலத்தின் முதல்வராக 8 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், நேற்று மாலை (ஆகஸ்ட் 09 ) ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

மேலும், நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் ஆளுநரிடம் புதிய கூட்டணி அரசை அமைக்க உரிமை கோரி 164 ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் அளித்தனர். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பிகார் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது.

பிகார்  மாநிலத்தின் முதல்வராக 8 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

பிரதமர் பதவியை குறிவைக்கிறாரா நிதிஷ்?

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *