கோவைக்கான தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மடைமாற்றிய பாஜக: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

கோவைக்கான தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக அரசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்­டம், சிட்­டி­பா­ளை­யத்­தில் நேற்று (ஏப்ரல் 12) நடை­பெற்ற இந்­தியா கூட்­ட­ணி­யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின்,

“வங்­க­தே­சத்துடன் பாஜக அரசு போட்ட ஒப்­பந்­தத்­தால், இங்கு உரு­வான நூலும் -­­­ து­ணி­யும் தேங்­கிக் கிடக்­கி­றது. 35 விழுக்­காடு மில்­களை, மூட வேண்­டிய நிலை­யில் இந்த மேற்கு மண்­ட­லம் இருக்­கி­றது. இரண்டு முறை கோவைப் பகு­திக்கு வந்து, கொங்­குப் பகுதி எனக்கு மிக­வும் நெருக்­க­மான பகுதி என்று பிர­த­மர் பேசி­னாரே, திமுக தமிழ்­நாட்­டிற்­கான வளர்ச்­சித் திட்­டங்­க­ளைத் தடுக்­கி­றது என்று சொன்­னாரே, எப்­ப­டிப்­பட்ட வடி­கட்­டிய பொய் இது. இந்­தக் கோவை பொதுக்­கூட்ட மேடை­யில் இருந்து, நான் பகி­ரங்­க­மாக ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைக்­கி­றேன்.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஒரு மிகப்­பெ­ரிய தொழில் நிறு­வ­னம், 6,500 கோடி ரூபாய் முத­லீட்­டில் கோவை­யைச் சேர்ந்த பல்­லா­யி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் முத­லீட்டை மேற்­கொள்­வ­தாக முடி­வா­னது.

தமிழ்­நாடு அர­சும் இதற்­கான எல்லா பேச்­சு­வார்த்­தை­க­ளும் முடிந்த பிறகு, அவர்­களை மிரட்டி அந்­தத் தொழில் திட்­டத்தை குஜ­ராத்­திற்கு மாற்­றி­விட்­டார்­கள்.

இது­தான் கோவைக்­கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்­கா­லத்­தில், மிகப் பெரிய வாய்ப்­பு­க­ளைத் தரும், செமி­கண்­டக்­டர் தொழில் திட்­டத்தை குஜ­ராத் மாநி­லத்­திற்கு மிரட்டி மடை­மாற்­றி­யது பாஜக தான்.

எப்­படி கூச்­சமே இல்­லா­மல் ஓட்டு கேட்டு வரு­கி­றீர்­கள்? கோவை­யில் இருக்­கும் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கி­றது உங்­க­ளுக்கு பிடிக்­க­லையா? கோவை மக்­கள் மேல் ஏன் உங்­க­ளுக்கு இவ்­வ­ளவு வன்­மம்? கோவை மக்­கள் அமை­தியை விரும்­பக் கூடிய மக்­கள்.

அமை­தி­யான இடத்­தில்­தான் தொழில் வள­ரும், தொழில் வளர்ச்சி இருக்­கும், நிறு­வ­னங்­களை நடத்த முடி­யும். பா.ஜ.க. போன்ற கல­வ­ரக் கட்­சி­களை உள்ளே விட்­டால், அமைதி போய்­வி­டும். தொழில் வளர்ச்சி போய்­வி­டும். நிறு­வ­னங்­களை நிம்­ம­தி­யாக நடத்த முடி­யாது. தமிழ்­நாட்டு வளர்ச்­சி­க­ளைத் தடுத்­தவர்களுக்கு பதில் வரு­கிற 19–ந் தேதி கிடைக்­கும்.

தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைத் தடுப்­பது யார் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். அத­னால், பிர­த­மர் இங்கு வந்து, இட்லி பிடிக்­கும், பொங்­கல் பிடிக்­கும், தமிழ் பிடிக்­கும், தமிழ்­நாடு பிடிக்­கும் என்று பேசும் போலி முக­மூடி மொத்­த­மா­கக் கிழிந்து தொங்­கி­விட்­டது.

இப்­படி “கோவை வேண்­டாம்” – “தமிழ்­நாடு வேண்­டாம்” என்று புறக்­க­ணித்த மோடிக்கு இப்­போது தமிழ்­நாடு சொல்ல வேண்­டி­யது, “வேண்­டாம் மோடி”. தெற்­கி­லி­ருந்து வரும் இந்­தக் குரல், இந்­தியா முழு­வ­தும் கேட்­கட்­டும். தமிழ்­நாட்டு வளர்ச்­சி­யைத் தடுத்­தால், தமிழ்­மொ­ழி­யைப் புறக்­க­ணித்­தால், தமிழ்ப் பண்­பாட்­டு­மேல் தாக்­கு­தல் நடத்­தி­னால், தமிழ்­நாட்டு மக்­க­ளின் பதில் எப்­படி இருக்­கும் என்று ஏப்­ரல் 19-ஆம் தேதி உங்­கள் வாக்­கு­கள் மூலம் நிரூ­பிக்­க­வேண்­டும்.

பா.ஜ.க.கூட்­ட­ணி­யை­யும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்­ட­ணி­யை­யும் ஒரு­சேர வீழத்­த­வேண்­டும். இந்­தியா கூட்­ட­ணிக்கு நீங்­கள் அளிக்­கும் வாக்கு, இந்­தி­யா­வைக் காக்­கட்­டும். தமிழ்­நாட்­டைக் காக்­கட்­டும். நம்­மு­டைய எதிர்­கா­லத் தலை­மு­றை­யைக் காக்­கட்­டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதி வழியில் சிவகார்த்திகேயன்… மரண மாஸ் தகவல் வெளியானது!

ஸ்டாலினுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் ஸ்வீட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share