2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.
இந்த தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.மேனகா போட்டியிடுகிறார்.
காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,
களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்,
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 47% வாக்குகளைப் பெற்று மீண்டும் புதுச்சேரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.
பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 39% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்,
அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.மேனகா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக…,புதுச்சேரி தொகுதியில் இந்த முறையும் வைத்திலிங்கம் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.
மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?
மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?
மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?
மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?