ஆளுநரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய உச்சநீதிமன்றம்… ரகுபதி தாக்கு!

Published On:

| By Selvam

ஆளுநர் ரவியின் உண்மை முகத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். Minister Ragupathi says Supreme Court

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆளு­நர் பத­வியே தேவையில்லை!

தமி­ழக அர­சின் பல்­வேறு மசோ­தாக்­களை ஆளு­நர் கிடப்­பில் போட்டுள்­ளதை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு வழக்கு தொடர்ந்து உள்­ளது.

இந்த வழக்கு விசா­ரணைக்கு வரும் ஒவ்­வொரு நாளும்,ஆளு­நர் தேவை­யில்­லா­மல் அர­சி­யல் செய்­கி­றார் என்ற ரீதி­யில் தான் தங்­கள் கருத்­துக்­களை தொடர்ந்து உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் பதிவு செய்து வரு­கி­றார்­கள்.

குறிப்­பாக பிப்­ர­வரி 7-ஆம் தேதி உச்­ச­ நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் சொன்ன கருத்­துக்­கள் ஆற­றிவு உள்ள ஒரு மனி­தர், ஆளு­நர் ஆர்.என்.ரவி என்­பது உண்­மை­யாக இருந்­தால் ஆளு­நர் பத­வியே தேவை­யில்லை என்று அவர் ராஜி­னாமா செய்து விட்டு போயி­ருக்க வேண்­டும்.

ஆளு­ந­ரின் பதவிக்கால­மான ஐந்து ஆண்டு காலம் கடந்து அவ­ருக்கு நீட்­டிப்­பும் தரா­மல் குடி­ய­ர­சுத் தலை­வர் சொல்­லும் வரை ஆளு­நர் பதவியில் தொட­ர­லாம் என்ற காத்­தி­ருப்பு பட்­டி­யல் ஆளு­நர் தான் இன்றைய தமி­ழக ஆளு­நர். அவர் பதவி சென்ற ஆண்டு அக்­டோ­பர் எட்டாம் தேதி­யு­டன் காலா­வதி ஆகி­விட்­டது. சரி உச்­ச­நீ­தி­மன்­றம் ஆளு­நர் பற்றி சொன்ன கருத்­துக்­களை நாம் பார்ப்­போம்.

ஆளுநரை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்!

ஆளு­ந­ரி­டம் கேள்வி மேல் கேள்­வி­யாக அடுக்­கிக் கொண்டே இருந்தார்கள் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள். பல்­க­லைக்­க­ழக மசோதா, மத்­திய சட்­டத்­திற்கு எதி­ராக இருந்­தால் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்ன ?, மாநில அரசு எப்­ப­டித்­தான் செயல்பட வேண்­டு­மென நினைக்­கி­றீர்­கள்?, மாநில அர­சின் செயல்பாடு­க­ளுக்கு ஆளு­நர் முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கக் கூடாது இருக்­க­வும் முடி­யாது. அந்த முட்­டுக்­கட்­டையை நீக்க வேண்­டும். ஆளுநர் எது­வும் கூறா­மல் மசோ­தாக்­களை கிடப்­பில் வைத்­தால், அவர் மன­தில் இருப்­பது அர­சுக்கு எப்­படி தெரி­யும்?

நான் ஒப்­பு­தல் தரா­மல் மசோ­தாக்­களை தடுத்து நிறுத்­து­கி­றேன். மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு உங்­க­ளைக் கேட்க மாட்­டேன் என ஆளு­நர் கூறி­னால் அதில் என்ன அர்த்­தம் உள்­ளது. இதன் மூலம் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின் 200-வது பிரி­வின் இரண்­டாம் பகு­தியை ஆளு­நர் நீர்த்து போக செய்­தி­ருக்­கி­றார். அவர் தனக்­கென ஒரு பாணியை அமைத்­துக் கொண்­ட­தா­கவே தெரிகிறது.

ஆளு­நர் இது தொடர்­பாக அர­சின் கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­க­லாம் அல்­லது இந்த மசோ­தாக்­களை நீங்­கள் மறு­ப­ரி­சீலனை செய்ய வேண்­டும் என்று கூறி­யி­ருக்­க­லாம்.

மசோ­தாக்­களை கிடப்­பில் போட்டு தீங்­கி­ழைத்­துள்­ளீர்­கள். இந்த விவகா­ரத்­தில் தமி­ழக அர­சின் மசோ­தாக்­க­ளில் ஆளு­நர் கண்­ட­றிந்த ஓட்­டை­கள் தான் என்ன?

எதற்­காக மசோ­தாக்­­களுக்கு ஒப்­பு­தல் அளிக்க மறுத்­தார் என்­ப­தற்­கான கார­ணத்தை காட்ட வேண்­டும். குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு மசோதாக்களை பரிந்­து­ரைக்­கும் போது ஆளு­நர் என்ன கார­ணம் கூறி­யுள்­ளார்?

எந்த கார­ணத்­தை­யும் கூறா­மல் பரிந்­துரை செய்­தி­ருந்­தால் குடி­ய­ர­சுத் தலை­வரே கேட்­டுத் தெரிந்து கொள்­வாரா?, உங்­கள் வாதப்­படி மசோதாக்­களை நிறுத்தி வைப்­ப­தாக இருந்­தால் பல்கலைக்கழகங்களின் நிலைமை என்ன ஆவது? துணை­வேந்­தர் நியமிக்­கப்ப­டா­விட்­டால் மாண­வ­ரின் எதிர்­கா­லம் கல்­வித்­த­ரம் என்ன ஆகும்?, ஒரு மசோதா சரி­யா­னது அல்ல என கரு­தி­னால் ஒரே­டி­யாக நிரா­க­ரிக்­க­லாமே தவிர அதை விடுத்து நிறுத்தி வைப்­பது ஏன்?,

இப்­படி ஆளு­நர் தமி­ழக மக்­க­ளுக்­கு எதி­ரா­க­வும் தேர்­ந்தெ­டுக்­கப்­பட்ட ஆட்­சி­யா­ளர்­க­ளின் பெரும்­பான்மை கருத்­துக்­கும் மதிப்பு தர­வில்லை என்­பதை உணர்ந்த உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அவ­ரின் உண்மை முகத்தை வெளிக்­கொண்டு வந்து விட்­டார்­கள்.

ராஜமன்னார் குழு!

ஆளு­நர் வேண்­டாம் என்­ப­து­தான் திமு­க­வின் நிரந்­தர கொள்கை. இதை 1969-ஆம் ஆண்டு அன்­றைய தமி­ழக முதல்­வர் கலை­ஞர் அர­சால் மத்திய மாநில உற­வு­கள் பற்றி ஆராய்­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட ராஜமன்­னார் குழு அதை உறு­திப்­பட தெரி­வித்­தி­ருக்­கி­றது.

ஆளு­நர்­களை தனது கட்­சி­யின் நல­னுக்­காக ஒன்­றிய அர­சாங்­கம் பயன்­ப­டுத்­து­கி­றது என்று ராஜ­மன்­னார் குழு வெளிப்­ப­டை­யா­கவே சுட்டிக் காட்­டி­யது. இன்று வரை அதே நிலை­மை­தான் தொடர்­கி­றது.

ராஜ­மன்­னார் குழு ஆளு­நர் பதவி தேவையா என்று இந்­தி­யா­வில் உள்ள எல்லா மாநில முதல்­வ­ருக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் சில கேள்விகளை அனுப்பி இருந்­தது.

மேற்­கு­வங்க முதல்­வர் ஜோதி பாசு தலை­மை­யி­லான அரசு ஆளு­நர் பதவி தேவை­யற்ற ஒன்று. அது முற்­றி­லும் நீக்­கப்­ப­ட­லாம் என்று கருத்து சொன்­னது. மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி அதி­கா­ரத்­தில் இருந்த திரிபுரா அர­சாங்­க­மும் இதே கருத்தை தான் சொன்­னது.

தெலுங்கு தேச தலை­வ­ரும் முதல்­வ­ரா­க­வும் இருந்த என்.டி.ராம­ராவ் தலை­மை­யி­லான ஆந்­திர அரசு ஆளு­நர் பதவி நீக்­கப்­பட வேண்­டும் என்று தான் கருத்து சொல்­லி­யது.

ஒன்­றிய அர­சாங்­கத்­தால் நிய­மிக்­கப்­பட்ட செதல் வாட் தலைமையிலான ஆய்­வுக் குழு ஆளு­நர் ஐந்­தாண்­டு­­களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று வலி­யு­றுத்­தி­யது.

அது­மட்­டு­மல்ல அவர் பதவிக்காலம் முடி­வ­தற்கு மூன்று மாதங்­க­ளுக்கு முன்பே புதிய ஆளு­நர் யார் என்­பது முடிவு செய்ய வேண்­டும் என்­றும் அந்த குழு கூறி­யது.

அதே­போல் முத­ல­மைச்­சரை கலந்து ஆலோ­சித்து அதன்­பின்பு தான் ஆளு­நர் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்ற மரபு தொடர வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது.

ஆரம்ப காலங்­க­ளில் ஆளு­நர் நிய­மிப்­ப­தற்கு முன்பு ஆட்­சி­யா­ளர்­களை கலந்து ஆலோ­சிப்­பது ஒன்­றிய அர­சின் வழக்­க­மாக இருந்­தது.

ஆளுநருக்கும் பாஜகவுக்கும் மிகப்­பெ­ரிய தலை குனிவு!

இப்­போது அந்த நடை­முறை காணா­மல் போய்­விட்­டது. சர்க்­கா­ரியா கமி­ஷ­னில் கர்­நா­டக முதல்­வ­ராக இருந்த ராம­கி­ருஷ்ண ஹெக்டே சொன்ன ஆலோ­சனை ஆளு­நர் நிய­மிப்­ப­தற்கு முன்பு முத­ல­மைச்­சர் ஒப்­பு­தல் பெற வேண்­டும்.

இதற்­கான சட்ட திருத்­தம் செய்ய வேண்­டும் என்று சொல்­லி­யி­ருந்­தார். அப்­போதே திமுக ஆளு­நர் பத­வியை நீக்­கி­விட வேண்­டிய காலம் வந்துவிட்­டது என்று பரிந்­துரை செய்­தது.

மாநில முதல்­வர்­கள் மற்­றும் அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் ஆளுநருக்கும் திமுக அர­சுக்­கும் உள்ள விவ­கா­ரம் இது ஏதோ ஒரு தனிப்­பட்ட ஒரு அர­சின் பிரச்­சினை என்று நினைக்­கக் கூடாது.

திமுக இந்த வழக்­கில் எல்லா மாநி­ல முதல்­வர்­க­ளுக்­கும் சேர்ந்­து­தான் வாதாடு­கி­றது. குடி­ய­ரசு தினம், சுதந்­திர தினம் இரண்டு நாட்­க­ளி­லும் ஆளு­நர் தான் கொடி­யேற்­றிக் கொண்­டி­ருந்­தார். சுதந்­திர தினத்­தில் முதல்­வர் கொடி­யேற்ற வேண்­டும் என்ற உரி­மையை வாங்­கித் தந்­தது கூட திமுக. முதல்­வ­ராக இருந்த கலை­ஞர் தான்.

நீதி­மன்­றம் கிட்­டத்­தட்ட சொன்ன கருத்­துக்­கள் எல்­லாமே ஆளு­ந­ருக்கும் ஆளு­நரை இயக்­கிக் கொண்­டி­ருக்­கும் பாஜகவுக்கும் மிகப்­பெ­ரிய தலை குனிவு. இதன் பிற­கா­வது மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரசை மதிக்க வேண்­டும் என்ற மாண்பு இந்த மாண்­பு­மி­கு­க­ளுக்கு வரவேண்டும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். Minister Ragupathi says Supreme Court

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share