அமெரிக்கா தனது அண்டை நாடான மெக்சிகோவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவிகித வரியையும் விதித்துள்ளது. மெக்சிகோவில் இருந்துதான் அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், மெக்சிகோ அதிபர் Claudia Sheinbaum நேரடியாக அமெரிக்க அதிபர் டிரம்பை தாக்கி சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் பேசிய விஷயங்களை பார்ப்போம்.
“எனது சக அமெரிக்கர்களே, நீங்கள் உங்களை சுற்றி சுவர் கட்ட வாக்களித்துள்ளீர்கள். உங்களுக்கு புவியியல் பற்றிய புரிதல் இல்லை. அமெரிக்கா ஒரு நாடு. அது கண்டம் அல்ல. உங்களுக்கு வெளியே 700 கோடி மக்கள் உள்ளனர். உங்களுக்கு மக்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அதனால், உங்களுக்கு புரியும் படி, மக்களை நான் நுகர்வோர் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
அதாவது, உங்கள் பொருட்களை வாங்கும் திறன் படைத்த 700 கோடி நுகர்வோர் இந்த உலகில் உள்ளனர். அவர்கள் ஐ போனுக்கு பதிலாக சாம்சங்குக்கு 42 மணி நேரத்துக்குள் மாறலாம். ஹூவாய்க்கும் மாறலாம்.

லீவீஸ் ஜீன்சுக்கு பதிலாக ஷாராவுக்கு மாறுவோம். 6 மாதத்துக்குள் போர்டு, செவ்ரலெட் கார்களில் இருந்து கியா, டொயாட்டா, வால்வோ, பி.எம்.டபிள்யூவுக்கு மாறலாம். உங்கள் கார்களை விட இந்த தயாரிப்புகள் தொழில்நுட்பத்திறனில் அற்புதமானவை.
உங்கள் ஹாலிவுட் படங்களை பார்ப்பதை நிறுத்தி விட்டு, அதை விட தரம் மிகுந்த லத்தீன் அமெரிக்க படங்களை பார்க்க தொடங்கலாம். நீங்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும் மெக்சிகோவில் கூட மெக்டோனால்டை விட சிறந்த பர்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. மெக்டொனால்டை விட சிறந்த நியூட்ரிசன்கள் கொண்ட பர்கர்கள் இவை.
உங்கள் நாட்டில் பிரமிடு உள்ளதா? எகிப்து, மெக்சிகோ, கௌதமாலா, பெரு, சூடான் போன்ற நாடுகளில் பிரமிடுகள் உள்ளன.
இவை, எங்களது கலாச்சாரத்தை எடுத்து காட்டுபவை. உலகின் பழங்கால அதிசயங்களில் ஒன்றாவது அமெரிக்காவில் உள்ளதா? இது எவ்வளவு அவமானகரமானது என்பது டிரம்புக்கு புரியுமா? நாங்கள் நைக் மட்டும்தான் வாங்க வேண்டுமா? அடிடாஸ் உள்ளதே. டென்னிஸ் ஷூ வாங்க மெக்சிகோவின் பனமா இருக்கிறது.
இந்த 700 கோடி நுகர்வோரும் உங்கள் தயாரிப்புகளை வாங்கவில்லை என்றால் உங்கள் நாட்டில் வேலையின்மை ஏற்படும். பொருளாதாரம் சீர்குலைந்து போகுமே. அப்போது, அந்த சுவரை உடைக்க நீங்கள் கெஞ்சுவீர்கள். நாங்கள், அதை விரும்ப மாட்டோம். நீங்கள்தான் அந்த சுவரை விரும்பி எழுப்பியது. அந்த சுவருக்குள் சுபிட்சமாக வாழுங்கள்” என்று மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.