செஸ் ஒலிம்பியாட் போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் அமர்ந்து விழாவைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

கலை நிகழ்ச்சிகள் எல்லாம் அரங்கை அதிர வைக்கின்றன.
இதனிடையே பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடல் கோயிலின் சின்னத்தைப் பரிசாக வழங்கினார்.
பிரதமரும், முதல்வரும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஏதோ சொல்ல, அதைப் பிரதமர் சிரித்துக்கொண்டே கேட்டார். அப்போது பிரதமரின் கையைப் பிடித்தபடி முதல்வர் ஸ்டாலினும் சிரித்தார். பின்னர் முதலமைச்சரின் தோளில் தட்டிக்கொடுத்துச் சிரித்தபடி உரையாடினார் மோடி.

மோடி வருவதற்கு முன்னதாக பேனர்களில் அவரது படம் இடம்பெறாதது குறித்து திமுக பாஜகவினரிடையே எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் தற்போது விழா மேடையில் இருவரும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பது இரு கட்சியினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா