காங்கிரஸ் தேர்தல்: வாக்களிப்பது எப்படி?

அரசியல்

காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 17 ) நடைபெறுகிறது.

22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதன் மிஸ்திரி நேற்று (அக்டோபர் 16 ) விளக்கம் அளித்தார்.

அதில், ”வாக்குப் பதிவு காகிதத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும். வாக்காளர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளருக்கு முன்னால் உள்ள அதற்கான கட்டத்தில் டிக் மட்டும் செய்ய வேண்டும்.

அதற்கு பதிலாக, அந்தக் கட்டத்தில் வேறு எந்த அடையாளமோ அல்லது ஏதேனும் எண்களை எழுதுவதோ கூடாது. அப்படிச் செய்தால், அந்த வாக்கை செல்லாத ஒன்றாக்கி விடும்” என அவர் தெரிவித்து உள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அமைச்சர்களை வரவேற்க ஏற்பாடு: பேருந்து மோதி இளைஞர் பலி!

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசித்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *