அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: அமலாக்கத் துறைக்கு அனுமதி!

அரசியல்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 4) அனுமதி வழங்கியுள்ளது.

2001-2006 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதுபோன்று அமலாக்க துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதனை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். அந்த வழக்கு இரண்டு வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஸ் சந்திரா செப்டம்பர் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். எனினும் அதுவரை அமலாக்க பிரிவு விசாரிக்க விதித்த தடையை நீட்டிக்க முடியாது என்று ஏற்கனவே பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்

பிரியா

’என்னை ஏன் மாற்றச் சொன்னீர்கள்?’ -ஓபிஎஸ்சுக்கு நீதிபதி கண்டனம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *