edappadi palaniswami supreme court

டெண்டர் முறைகேடு வழக்கு: அக்டோபர் 17-க்கு ஒத்திவைப்பு!

அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிருதா போஸ், பெலாஸ் நிவேதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷாந்த் தபே ஆஜராகி, “டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்புடையதாக இல்லை. பழைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளை விசாரிக்க வேண்டியது அவசியமானது. அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விசாரணையை துவங்க உத்தரவிட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், “டெண்டர் முறைகேடு விசாரணை முடிந்துவிட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் அரசியலை புகுத்தக்கூடாது. டெண்டர் முறைகேடு வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளார்.

செல்வம்

பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்

கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *