வெறும் போட்டோஷூட், வீடியோஷூட்தான் : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

Edappadi Palaniswami criticized Stalin

விளம்பரங்களில் காட்டும் கவனத்தை ஸ்டாலின் மக்கள் பணியிலும் காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Edappadi Palaniswami criticized Stalin

தமிழகத்தில் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தநிலையில் உங்களில் ஒருவன் தொடரில் பொதுமக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து இன்று (பிப்ரவரி 15) வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், பழனிசாமி அறிக்கைகளைப் பார்த்தால், பாஜக-வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பாஜகவிற்கான டப்பிங் குரல்தான். நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான். இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும் என்று விமர்சித்திருந்தார்.

விளம்பரங்களில் தான் ஆர்வம்! Edappadi Palaniswami criticized Stalin

 Edappadi Palaniswami criticized Stalin

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.

ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி,

“எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை ஸ்டாலின் நடத்துகிறார்.

இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?

இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். Edappadi Palaniswami criticized Stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share