திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம்: காரணம் செந்தில் பாலாஜி?

அரசியல்

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வருகிற ஜூன் 14ஆம் தேதி கோவையில் தேர்தல் வெற்றி விழாவையும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும் முதல்வருக்கு நன்றி பாராட்டு விழாவையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தேதி திமுகவினர் சிலர் மத்தியில் புருவத்தை உயர வைத்தது.

ஜூன் 14ஆம் தேதி சரியாக ஒரு வருடம் முன்பு இப்போது சிறையில் இருக்கிற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாள்.

அந்த நாளில் தேர்தல் வெற்றி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடத்துவதை குறிப்பாக கோவையில் நடத்துவதை கொங்கு மாவட்டங்களில் உள்ள செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சற்று வேதனையோடும் கோபத்தோடும் பார்ப்பதாக முதல்வருக்கு தகவல் சென்றிருக்கிறது.

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் அந்த விழாவின் தேதி மாற்றப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என தற்போது தகவல்கள் வந்துள்ளன.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொது மாறுதல் கலந்தாய்வு தேதி : அரசு மருத்துவர்கள் கோரிக்கை!

வேலைவாய்ப்பு : புதுச்சேரி ஜிப்மரில் பணி!

நாற்பதும் நமதே! தமிழ்நாட்டின் தனித்துவமும் இந்திய அரசியலும்!

டாப் 10 நியூஸ் : மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் முதல் பள்ளிகள் திறப்பு வரை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0