திமுக 15-வது பொதுக்குழு கூட்டம் இன்று (அக்டோபர் 9) காலை சென்னை அமைந்தகரையில் 10 மணிக்கு துவங்கியது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக திமுக தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
தணிக்கை குழு உறுப்பினர்களாக, கு.பிச்சாண்டி, முகமது சகி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
‘மிகவும் யதார்த்தமாக பேசுகிறீர்கள்’ : மத்திய அமைச்சரிடம் மயிலாப்பூர் மக்கள்!
பொன்னியின் செல்வனில் மணிரத்னம் செய்யும் மாற்றம்!