புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது.
புதிய மதுபான கொள்கை தொடர்பாக மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா காரில் ஊர்வலமாக சென்று ஆஜரானார்.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர்.
அவரது கைதை கண்டித்து டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
யோகா செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண்: வைரல் வீடியோ!
அக்ஷய் குமாருக்கு ‘செல்ஃபி ராஜ்’ வசூல் கொடுத்த ஷாக்!