மீண்டும் நாகை, திருப்பூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்

Published On:

| By Selvam

Cpi contest in Nagapattinam Tiruppur

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (மார்ச் 12) உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளிலும், கொமதேக நாமக்கல், ஐயூஎம்எல் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடும் என்று தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான போதே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவதென பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் சிபிஐ மீண்டும் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவையை விட்டுக்கொடுத்த மார்க்சிஸ்ட்: மதுரை, திண்டுக்கல்லில் போட்டி!

இந்தத் தொகுதிகளை வச்சிக்கங்க… இந்தத் தொகுதிகளைக் கொடுங்க… திமுக-காங்கிரஸ் கசமுசா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share