தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (அக்டோபர் 17) தொடங்கியது. இதன் இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 18) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியன சட்டமன்றத்தில் வெளியிடப்படும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கெனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் வி.கே.சசிகலா, டாக்டர் கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு,
அவர்களை விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்’ என சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ’எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை’ என கூறப்பட்டு உள்ளது.
ஜெ.பிரகாஷ்
நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
இலங்கையில் சீன ராணுவம்: சீமான் எச்சரிக்கை!