திமுக நிர்வாகியை கொலை செய்ய முயற்சித்ததாக தொடர்புடைய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ்,
“அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் தான் சசிக்குமாரை கொலை செய்தோம்” என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்ட்டார்.
இந்த நிலையில் தற்போது வழக்கில் இருந்து அமைச்சர் விடுவிக்கப்பட்டதால் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 மற்றும் 5: ரூ.404.45 கோடிக்கு ஒப்பந்தம்!
இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி நிறுவனம்!