அதிமுகவின் போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓபிஎஸ்

அரசியல்

அதிமுகவின் போலி பொதுக்குழுவைக் கலைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு இந்தியத் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. கடந்த 24 ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார்.

இந்நிலையில் இன்று (மே 1) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

`கழகப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம். ஜி. ஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக, கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும்,

கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்ற விதியை மாற்றியும், அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும்,10 மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும்.

ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையைப் பறித்தும்,

கழக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாகச் செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட்ட வேண்டும் என்றும்

கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது.

புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும், அதன்பிறகு, முறையான, நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்` என்று குறிப்பிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

பிரியா

பி டி ஆர் – முதல்வர் சந்திப்பு : டி. கே. எஸ்.இளங்கோவன் விளக்கம்!

ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்: ஏன்?

ஓட, ஓட பாஜக மாவட்ட தலைவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினர்

AIADMKs fake general body
+1
1
+1
5
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *