என்ன நடக்கப்போகிறது?: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தீர்ப்பு தேதியை அறிவித்த ஐகோர்ட்டு!

Published On:

| By Kavi

AIADMK internal party issue

அதிமுக உட்கட்சி விவகார வழக்கில் தீர்ப்பு தேதியை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) அறிவித்துள்ளது. AIADMK internal party issue

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பன்னீர்செல்வம் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பீியுமான ரவீந்திரநாத் ஆகியோரும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினர்.

சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

“கட்சியில் உறுப்பினராக இல்லாத இவர் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தக்கல் செய்ய முடியும். எனவே அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரவீந்திரநாத் சார்பில், “ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டு எதிரணி ஒன்று உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு தெரியவந்தாலே, தாமாக முன்வந்து அக்கட்சியின் சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் AIADMK internal party issue

AIADMK internal party issue

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “சட்டத்துக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்க முடியும். மாறாக நீதிமன்றம் போல பலருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க முடியாது. குறிப்பாக கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடியாது. சின்னம் தொடர்பான விவகாரத்தில் இல்லாத அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது” என்று வாதிடப்பட்டது.

இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்றும் இன்று (பிப்ரவரி 7) விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. தனக்கான ஆதரவு நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

ரவீந்திரநாத் சார்பில், “அதிமுக கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அதனால் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறப்பட்டது

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். AIADMK internal party issue

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share