தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, மார்ச் 24-ஆம் தேதி முதல் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக்கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் போலீஸ் மானியக்கோரிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டமன்ற முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,Police grant request changed
“மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும்!
25-4-2025
(வெள்ளிக்கிழமை)
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
26-4-2025 (சனிக்கிழமை)
மாநிலச் சட்டமன்றம்
ஆளுநர் மற்றும் அமைச்சரவை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
(சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை)
நிதித் துறை
ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
27-4-2025 (ஞாயிற்றுக்கிழமை)
அரசு விடுமுறை
28-4-2025 (திங்கட்கிழமை)
காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
— தொடர்ச்சி

29-4-2025 (செவ்வாய்க்கிழமை)
காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) – பதிலுரை
பொதுத் துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
அரசினர் சட்டமுன்வடிவுகள் – ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும்” என்று தெரிவித்துள்ளார்.