போலீசாரின் காரை எட்டி உதைத்த நடிகை: பாய்ந்தது வழக்கு!

Published On:

| By Jegadeesh

அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவல் ஆணையரின் கார் மீது மோதிவிட்டு, எட்டி உதைத்து ரகளை செய்ததாக விஷால் பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே காரை பார்க் செய்திருந்தார். அதே அப்பார்மெண்டை சேர்ந்த நபரின் கார் ஒன்று, கமிஷனரின் காரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், அந்த கார் தெலுங்கு சினிமா நடிகை டிம்பிள் ஹையாத்திக்கு சொந்தமானது எனவும், அதில் அவர் ஆண் நண்பர் டேவிட்டுடன் பயணித்திருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கமிஷனர் கார் டிரைவர் இதுதொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் நடிகை டிம்பிள் ஹையாத்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் விசாரணைக்காக காவல் நிலையம் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

டிம்பிள் ஹையாத்தி மீது அளிக்கப்பட்ட புகாரில், தனது காரின் முன்பு அவரது காரை நிறுத்தி இதே போல் பல முறை தொல்லை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தனது காரில் மோதிவிட்டு எட்டி உதைத்து ரகளை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் தவறுகள் மறைக்கப்படாது” என டிம்பிள் ஹையாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’சவால் விடும் காட்சி சிறப்பாக வர சரத்பாபுவே காரணம்’: ரஜினி உருக்கம்!

குடிசை பகுதி டூ சர்வதேச மாடல்: இணையத்தை கலக்கும் தாராவி சிறுமி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share