உடல்நலக்குறைவால் காலமான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. ஹீராபென் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.
தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு சென்றார். விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் ரேசான் கிராமத்தில் உள்ள அவரது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த தனது தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது தாயின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி ஊர்வல வாகனத்தில் கொண்டு சென்று வைத்தார். அங்கிருந்து அகமதாபாத்தில் உள்ள செக்டர் 30 மயானத்திற்கு ஹீராபென் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
தகன மேடையில் வைத்து நரேந்திர மோடி மற்றும் அவரது சகோதரர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். தொடர்ந்து ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!