பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியானது. இதில் 94.56 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டவாரியான தேர்ச்சி விகிதம்:
அந்த வகையில், இன்று வெளியிடப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாவட்ட வாரியாக பார்க்கும்போது, திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து,
- ஈரோடு – 97.42%
- சிவகங்கை – 97.42%
- அரியலூர் – 97.52%
- கோவை – 96.97%
- விருதுநகர் – 96.64%
- பெரம்பலூர் – 96.44%
- திருநெல்வேலி – 96.44%
- தூத்துக்குடி – 96.39%
- நாமக்கல் – 96.10%
- தென்காசி – 96.07%
- கரூர் – 95.90%
- திருச்சி – 95.74%
- கன்னியாகுமரி – 95.72%
- திண்டுக்கல் – 95.40%
- மதுரை – 95.19%
- ராமநாதபுரம் – 94.89%
- செங்கல்பட்டு – 94.71%
- தேனி – 94.65%
- சேலம் – 94.60%
- சென்னை – 94.48%
- நீலகிரி – 94.27%
- கடலூர் – 94.36%
- புதுக்கோட்டை – 93.79%
- தருமபுரி – 93.55%
- தஞ்சாவூர் – 93.46%
- விழுப்புரம் – 93.17%
- திருவாரூர் – 93.08%
- கள்ளக்குறிச்சி – 92.91%
- வேலூர் – 92.53%
- மயிலாடுதுறை – 92.38%
- திருப்பத்தூர் – 92.34%
- காஞ்சிபுரம் – 92.28%
- ராணிப்பேட்டை – 92.28%
- கிருஷ்ணகிரி – 91.87%
- திருவள்ளூர் – 91.32%
- நாகப்பட்டினம் – 91.19%
- திருவண்ணாமலை – 90.47%
இதேபோல, புதுச்சேரியில் 93.38 சதவீதமும், காரைக்காலில் 87.03 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?