தமிழ்நாட்டில் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. Permission to extract oil and gas in the deep sea
மத்திய எரிசக்தி இயக்குனரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஓஎல்ஏபி எனப்படும் திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 9ஆவது சுற்று ஏலம் விடப்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடத்திலும், சென்னை அருகே ஆழ்கடலில் ஒரு இடத்திலும் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி தென்முனையில் உள்ள ஆழ்கடலில் 1. CY – UDWHP-2022/1 – 9514.63 ச.கி, 2. CY – UDWHP-2022/2 – 9844.72 ச.கி, 3. CY – UDWHP-2022/3 – 7795.45 ச.கி, சென்னைக்கு அருகே ஆழ்கடலில் 1 வட்டாரங்கள் முறையே… 1. CY – UDWHP-2023/1 – 5330.49 ச.கி என மொத்தமாக 32485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் எண்ணெய் எடுத்தால் கடல் சுற்றுச்சூழல் மாசுபடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த போதும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். Permission to extract oil and gas in the deep sea
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். Permission to extract oil and gas in the deep sea