ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெடானா பகுதியில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசும்போது “டிடிபி வலுவான கட்சி. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி தேவை. அதற்காக தெலுங்கு தேசம் கட்சி போராடுகிறது. நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இந்த சூழ்நிலையில் டிடிபி-யும் ஜனசேனாவும் இணைந்தால், ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கம் மாநிலத்தில் மூழ்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு செப்டம்பர் 9 ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்திக்க பவன் கல்யாண் முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
லோக்சபா தேர்தலுக்கு முன், ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்ளும் முடிவை செப்டம்பர் 25ம் தேதி தமிழக அதிமுக அறிவித்தது.
கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எங்கள் கட்சியினரை காயப்படுத்தியது. கட்சித் தொண்டர் ஒரு கட்சியின் வெற்றிக்காகவும், அதன் நலனுக்காகவும் உழைக்க வேண்டும், கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்கள் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறினார்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டணி குறித்து பேசவில்லை: மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்!
ஆட்டோ மொபைல்: 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி சாத்தியமா?
Comments are closed.