நெல்லை கவின் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அத்துடன் ஜாதி ஆணவக் கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாய வேண்டும் என்கிற குரலும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் கவின் ஜாதி ஆணவப் படுகொலை, ஜாதிய தலைவர்களின் குருபூஜைகளின் போது நடக்கும் சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து யூடியூபர்களான ‘பரிதாபங்கள்’ கோபி- சுதாகர் டீம் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
ஜாதி, ஆண்ட பரம்பரை ஆகியவற்றின் பெயரால் மேற்கொள்ளப்படும், தூண்டிவிடப்படும் போக்குகளை நையாண்டியாக விளாசிவிட்டிருக்கிறது கோபி-சுதாகர் டீம். இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கோபி-சுதாகர் டீமை பாராட்டி வருகின்றனர்.
