நேரு – உதயநிதி போட்ட ரூட் : திமுக மாநாட்டு ஏற்பாடுகள் – பந்தல் சிவா பேட்டி!

Published On:

| By Kavi

DMK Youth Conference hall pandhal Siva

DMK Youth Conference hall pandhal Siva

திமுக இளைஞரணி மாநாட்டுக்கான ஏற்பாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

9 லட்சம் சதுர அடியில், மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் பேர் உள்ளே அமர இந்த பந்தலில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

இந்த பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்த பந்தல் சிவா மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், “நான் சின்ன வயதில் இருக்கும் போது வடுவூரில் கட்ட வண்டியில் கீற்று மரங்களை ஏற்றி வந்து எனது தந்தை இந்த தொழிலை தொடங்கினார்.

நான் லாரியில் இரும்பு பைப்புகளை ஏற்றி வந்தேன். தற்போது என் மகள் ஜெர்மன் டெக்னாலஜியில் இந்த வேலைகளை செய்கிறார்” என்றார்.

இந்த மாநாடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது எந்தளவுக்கு சவாலாக இருந்தது என்ற கேள்விக்கு, “மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. இயற்கை பேரிடரால் தேதியை மாற்றினோம். சில நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தள்ளிவைக்கப்பட்டது. இருந்தாலும் சமாளித்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்களுக்கு வழிகாட்டியது முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு.

இந்த பந்தலில் உள்ளே ஒன்றரை லட்சம் பேர் உட்காரலாம். வெளியில் ஒன்றரை லட்சம் பேர் நிற்கலாம். இரண்டு லட்சம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய மேடை அமைத்துள்ளோம்.

பண்டைய பாரம்பரிய முறையில் அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் ஆகியோரது படங்களை செய்து வைத்துள்ளோம். 5 நுழைவாயில்கள் உள்ளன.

இந்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட 9 பேர் உதயநிதியிடம் பேசி திட்டமிட்டு கொடுத்தார்கள்.

திருச்சியில் இருந்து ஹக்கீம் என்ற ஹோட்டல் கம்பெனி சமையல் வேலைகளை செய்திருக்கிறது. இந்த அரங்கம் உலக சாதனைக்கு சென்றிருக்கிறது. ஒரே இடத்தில் 9 லட்சம் சதுரடியில் இந்தியாவில் யாரும் போட்டதில்லை.

மாநாட்டு மேடை 100 அடி நீளம், 40 அடி அகலம், 6 அடி உயரத்தில் போட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது நடத்திய முதல் மாநாட்டுக்கான ஏற்பாட்டையும் நாங்கள் தான் செய்தோம்.

இப்போது உதயநிதி ஸ்டாலின் நடத்தும் இந்த மாநாட்டுக்கும் நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.
மேடை போடுவதற்கு இளைஞரணி செயலாளர் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்தார்.

தொண்டர்கள் படிக்க அன்பகம், முரசொலி புத்தக கண்காட்சி, கலைஞர் அரங்கம் என ஒவ்வொன்றுக்கும் உதயநிதி சொல்ல சொல்ல செட் அமைத்திருக்கிறோம்” என கூறினார் பந்தல் சிவா.

வீடியோவில் காண : https://www.youtube.com/watch?v=uxXW-uYHcz0

பேட்டி : ஃபெலிக்ஸ் இன்பஒளி

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அந்த ரெண்டு பேரும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க: ராகுல் டிராவிட்

விடாமுயற்சி: ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு?

DMK Youth Conference hall pandhal Siva

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share