பாகிஸ்தானியர்களின் விசா ரத்து : உடனே வெளியேற உத்தரவு!

Published On:

| By Kavi

Pakistanis visa cancelled

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்து இன்று (ஏப்ரல் 24) உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 27 முதல் அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. Pakistanis visa cancelled

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லக்‌ஷர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிடெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. 

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்தசூழலில் தான் இந்தியாவில் இருக்கக் கூடிய பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. Pakistanis visa cancelled

பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என்றும்  

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் வருகிற ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் விசா காலாவதியாகும் முன்பாக அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 இந்தியர்கள், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.  Pakistanis visa cancelled

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share