பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் அழிப்பு- வீடியோ வெளியிட்ட ராணுவம்!

Published On:

| By Minnambalam Desk

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்- Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் இன்று டெல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருத்தம் தருகிறது.
  • தீவிரவாதிகளின் கட்டமைப்புகள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது.
  • ஆகாஷ் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்தோம்
  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் டிரோன்கள் அழிப்பு

  • இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி தீவிரவாதிகளால் நுழைய முடியாது
  • பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய தாக்குதலால் அந்நாட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
  • இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
  • தீவிரவாதிகள் பிரச்சனையை பாகிஸ்தான் தமது சொந்த பிரச்ச்னையாகவே கருதுகிறது
  • தாக்குதல் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும்.

வீடியோ வெளியீடு

இந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டது தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share