பிரபுவுக்கே சொந்தம்…. சிவாஜி வீட்டு வழக்கில் பதிவுத்துறைக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

Order to confiscate Shivaji house revoked

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) ரத்து செய்தது. Order to confiscate Shivaji house revoked

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜெகஜ்ஜால கில்லாடி படம் தயாரிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3.37 கோடி ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் கடன் வாங்கி இருந்தது.

இந்த கடன் பிரச்சனை உயர் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து 9.39 கோடி ரூபாயை செலுத்த, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரான ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் அறிவுறுத்தினார்.

மத்தியஸ்தர் பிறப்பித்த இந்த உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் “எனது தந்தையின் அன்னை இல்லம் எனது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரர் அதாவது துஷ்யந்த் அப்பாவான ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை. வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ராம்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “அன்னை இல்லம் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை. எதிர்காலத்தில் அவ்வாறு எந்த உரிமையையும் கோரமாட்டேன் ”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வழக்கு தொடுத்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம், “பல கோடி ரூபாய் மதிப்பிலான அன்னை இல்லம் வீட்டில் ராம்குமார் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார் என்பது நம்பும் படியாக இல்லை.

அந்த சொத்தின் முழு உரிமையும் பிரபுவிற்கு இருக்கிறதா என்பதை முழுமையான விசாரணைக்கு பின்பு தான் அறிய முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது” என்று வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து பிரபு மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் பிரபு எனவும் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். Order to confiscate Shivaji house revoked

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share