ஓபிஎஸ் தலைமையில் ஆகஸ்ட் 20-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Published On:

| By Selvam


ஆகஸ்ட் 20-ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் செல்வதை தடுக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று மதுரை மாநாடு…ஓபிஎஸ் – டிடிவி திட்டம் என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் மதுரை மாநாடு நடைபெறும் அதே நாளில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ ஆடிட்டோரியத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

நான் என்ன பேசினேன்? மோடி என்ன பேசுகிறார்? – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

“ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் ஜனநாயக விரோதம்” – மாணிக்கம் தாகூர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share