சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் ஜூலை 1ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும்.
இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூருக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஐசிசி அறிவிப்பு!