அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

Published On:

| By Selvam

அதானி முறைகேடுகள் குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று (மார்ச் 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி துவங்கியது.

ADVERTISEMENT

கூட்டத்தொடர் துவங்கியது முதல் லண்டனில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ஆளும் கட்சியான பாஜகவும்,

அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.

ADVERTISEMENT

இதனால் மக்களவை, மாநிலங்களவை கடந்த நான்கு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது. இன்று 5-வது நாளாக காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் துவங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் மார்ச் 20-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி-க்கள் அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

செல்வம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share