காஷ்மீரில் 9-வது நாளாக ‘Operation Akhal’- பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published On:

| By Mathi

Army JK

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘Operation Akhal’ ராணுவ நடவடிக்கை 9-வது நாளாக இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி தொடருகிறது. இந்நடவடிக்கையில பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ‘Operation Akhal’ ராணுவ நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கியது. தெற்கு காஷ்மீரின் Akhal பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழித்தொழிக்க இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் தற்போதுவரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அடர்ந்த வனம் , குகைகள் நிறைந்த பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்த குகைகளை மறைவிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அகல் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் உயிரிழந்த வீரர்கள் லான்ஸ்நாயக் பிரதிபால் சிங், சிப்பாய் ஹர்மீந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தம் 20 பயங்கரவாதிகளை தேடி அழிக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share