ஊட்டி: போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு

Published On:

| By Minnambalam

ooty

ஊட்டியில் விடுமுறை நாளான நேற்று (ஜூலை 24) ஒருநாள் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸார் ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தினர். 

ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் நவீன கருவி வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் 200 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் மலைப்பாதையில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

– ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share