தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், வடபழனி வழியாக செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Omni buses will not run via Tambaram
இந்த ஆண்டு வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். ஏராளமானோர் அரசு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் தாம்பரம், வடபழனி வழியாக இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.
இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பயணிகள் ஆம்னி பேருந்து தொடர்பான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Omni buses will not run via Tambaram
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேன்லில் இணையுங்கள்…
மோனிஷா